காசாவில் "உடனடியாக வன்முறையைத் தவிர்க்க வேண்டும்" இந்தியா அழைப்பு!
Jul 26, 2025, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசாவில் “உடனடியாக வன்முறையைத் தவிர்க்க வேண்டும்” இந்தியா அழைப்பு!

Web Desk by Web Desk
Mar 5, 2024, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியம் எனத் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.

“நீடித்த தீர்வை எட்டுவதற்கு, வன்முறையை உடனடியாகத் தணிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் ஐநா பொதுச் சபையில் தெரிவித்தார்.

ஐ.நா. சபையில் காசா நெருக்கடி குறித்து UNGA மாநாட்டில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் பேசுகையில்,

“இந்தியாவைப் பொறுத்த வரையில், காசாவில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் மோதலால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காசா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, மோதலில் பொதுமக்கள் உயிரிழந்ததை நாங்கள் கடுமையாக கண்டித்துள்ளோம்.

“வன்முறை மற்றும் விரோதங்கள் மேலும் அதிகரிப்பதைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. எந்தவொரு மோதல் சூழ்நிலையிலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டியது அவசியம். சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் மதிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா நீண்டகால மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது.  அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க கோருகிறோம்.

இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் சுதந்திரமாக வாழக்கூடிய இரு நாடுகளின் தீர்வை ஆதரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரிவத்தார்.

இறுதி நிலைப் பிரச்சினைகளில் இரு தரப்புக்கும் இடையே நேரடியான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அடையப்படும் இரு நாடுகளின் தீர்வு மட்டுமே நீடித்த அமைதியை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

Tags: UNGAIndia calls for ‘immediate de-escalation’ in Gaza
ShareTweetSendShare
Previous Post

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஜே.பி.நட்டா!

Next Post

கும்பகர்ண தூக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் – கண்டு கொள்ளாத தமிழக அரசு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies