காசாவில் "உடனடியாக வன்முறையைத் தவிர்க்க வேண்டும்" இந்தியா அழைப்பு!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசாவில் “உடனடியாக வன்முறையைத் தவிர்க்க வேண்டும்” இந்தியா அழைப்பு!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 04:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியம் எனத் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.

“நீடித்த தீர்வை எட்டுவதற்கு, வன்முறையை உடனடியாகத் தணிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் ஐநா பொதுச் சபையில் தெரிவித்தார்.

ஐ.நா. சபையில் காசா நெருக்கடி குறித்து UNGA மாநாட்டில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் பேசுகையில்,

“இந்தியாவைப் பொறுத்த வரையில், காசாவில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் மோதலால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காசா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, மோதலில் பொதுமக்கள் உயிரிழந்ததை நாங்கள் கடுமையாக கண்டித்துள்ளோம்.

“வன்முறை மற்றும் விரோதங்கள் மேலும் அதிகரிப்பதைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. எந்தவொரு மோதல் சூழ்நிலையிலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டியது அவசியம். சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் மதிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா நீண்டகால மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது.  அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க கோருகிறோம்.

இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் சுதந்திரமாக வாழக்கூடிய இரு நாடுகளின் தீர்வை ஆதரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரிவத்தார்.

இறுதி நிலைப் பிரச்சினைகளில் இரு தரப்புக்கும் இடையே நேரடியான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அடையப்படும் இரு நாடுகளின் தீர்வு மட்டுமே நீடித்த அமைதியை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

Tags: UNGAIndia calls for ‘immediate de-escalation’ in Gaza
Share
Tweet
SendShare
Previous Post

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஜே.பி.நட்டா!

Next Post

கும்பகர்ண தூக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் – கண்டு கொள்ளாத தமிழக அரசு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies