உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள கவுர் சிட்டி சொசைட்டியின் 16வது அவென்யூவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
உடனே அப்பகுதி மக்கள் தீயனை துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த தீயனை துறையினர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அரங்கேறிய போது ஒரு குடியிருப்பு காலியாக இருந்தது, மற்றொரு குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினர் தீ ஏற்பட்டவுடன் படிக்கட்டுகள் வழியாக உடனே வெளியேறினார். எனவே உயிர்பலி தவிர்க்கப்பட்டது.
மேலும் தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இது குறித்து பிஸ்ராக் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.