250 பாலஸ்தீன தீவிரவாதிகள் கைது: இஸ்ரேல் இராணுவம் அதிரடி!
Jan 14, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

250 பாலஸ்தீன தீவிரவாதிகள் கைது: இஸ்ரேல் இராணுவம் அதிரடி!

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கான் யூனிஸ் நகரில் 250 பாலஸ்தீன தீவிரவாதிகளை கைது செய்த இஸ்ரேல்  இராணுவம்,  துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.  இஸ்ரேல் – ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில், பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

காஸாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து, தாக்குதல் நடத்தி வருகிறது.  அப்பாவி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது. இதனால், ஹமாஸ் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்தும், கொன்றும் வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் இராணுவம் 250 பாலஸ்தீன தீவிரவாதிகளை கான் யூனிஸ் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது.

கான் யூனிஸின் ஹமாத் டவர்ஸ் பகுதியில், ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இராணுவம் இறங்கி உள்ளது. அப்பகுதியில் இருந்த ஆயுதத் தொழிற்சாலையை இஸ்ரேல் இராணுவம் சோதனையிட்டது.

அங்கு மறைந்து இருந்த ஒரு ஹமாஸ் ஸ்னைப்பர் செல் கமாண்டர் மற்றும் இரண்டு ஹமாஸ் படை தளபதிகள் உட்பட பலர் இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களை இஸ்ரேல் இராணுவம் கைது செய்தது.

கூடுதலாக, கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது. மேலும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத்துடன் தொடர்புடைய மற்ற தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.

ஹமாத் டவர்ஸ் என்பது கடந்த 2012-ஆம் ஆண்டு காஸா மோதலைத் தொடர்ந்து கத்தாரின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. இது 40 கோபுரங்களைக் கொண்ட குடியிருப்புப் பகுதியாகும். 2016-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஆயுத உற்பத்தி நிலையம், சுரங்கப்பாதைகள் உள்ளன.  இது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் தனிப்பட்ட கோட்டையாகவும் கருதப்படுகிறது.

Tags: IsraelgazaIsraeli forcesKhan YunisHamad Towers
ShareTweetSendShare
Previous Post

வருமான வரி தாக்கல் : புதிய விதிகள் குறித்த முழு விவரம்!

Next Post

திமுக ஃபைல்ஸ் பாகம் 5-வது ஆடியோ ரிலீஸ்! – கெத்து காட்டிய அண்ணாமலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies