250 பாலஸ்தீன தீவிரவாதிகள் கைது: இஸ்ரேல் இராணுவம் அதிரடி!
Sep 30, 2025, 07:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

250 பாலஸ்தீன தீவிரவாதிகள் கைது: இஸ்ரேல் இராணுவம் அதிரடி!

Web Desk by Web Desk
Mar 7, 2024, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கான் யூனிஸ் நகரில் 250 பாலஸ்தீன தீவிரவாதிகளை கைது செய்த இஸ்ரேல்  இராணுவம்,  துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.  இஸ்ரேல் – ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில், பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

காஸாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து, தாக்குதல் நடத்தி வருகிறது.  அப்பாவி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தி உள்ளது.

ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது. இதனால், ஹமாஸ் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்தும், கொன்றும் வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் இராணுவம் 250 பாலஸ்தீன தீவிரவாதிகளை கான் யூனிஸ் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது.

கான் யூனிஸின் ஹமாத் டவர்ஸ் பகுதியில், ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இராணுவம் இறங்கி உள்ளது. அப்பகுதியில் இருந்த ஆயுதத் தொழிற்சாலையை இஸ்ரேல் இராணுவம் சோதனையிட்டது.

அங்கு மறைந்து இருந்த ஒரு ஹமாஸ் ஸ்னைப்பர் செல் கமாண்டர் மற்றும் இரண்டு ஹமாஸ் படை தளபதிகள் உட்பட பலர் இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களை இஸ்ரேல் இராணுவம் கைது செய்தது.

கூடுதலாக, கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது. மேலும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத்துடன் தொடர்புடைய மற்ற தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.

ஹமாத் டவர்ஸ் என்பது கடந்த 2012-ஆம் ஆண்டு காஸா மோதலைத் தொடர்ந்து கத்தாரின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. இது 40 கோபுரங்களைக் கொண்ட குடியிருப்புப் பகுதியாகும். 2016-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஆயுத உற்பத்தி நிலையம், சுரங்கப்பாதைகள் உள்ளன.  இது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் தனிப்பட்ட கோட்டையாகவும் கருதப்படுகிறது.

Tags: IsraelgazaIsraeli forcesKhan YunisHamad Towers
ShareTweetSendShare
Previous Post

வருமான வரி தாக்கல் : புதிய விதிகள் குறித்த முழு விவரம்!

Next Post

திமுக ஃபைல்ஸ் பாகம் 5-வது ஆடியோ ரிலீஸ்! – கெத்து காட்டிய அண்ணாமலை

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies