பருவதமலையில் பகீர் - இந்து முன்னணி விளாசல்!
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பருவதமலையில் பகீர் – இந்து முன்னணி விளாசல்!

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் புனித மலைகளில் ஒன்றான பருவதமலையில், பக்தர்களின் தரிசனத்திற்கு வசதியும், மலைகளில் சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளயிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே சுமார் 4,500 அடிகள் கொண்ட பருவதமலை மலைக்கோயில் உள்ளது. பௌர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலைக்கோயில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க வருகை தருகின்றனர்.‌ மலையை சுற்றி அரிய வகை மூலிகைகளும் விலை உயர்ந்த மரங்களும் சூழ்ந்து இயற்கை எழில் நிறைந்த மலையாக இது விளங்குகிறது.

இந்த நிலையில், பர்வதமலையில் சமூக விரோதிகள் இந்த மலைக்கு தீ வைத்து உள்ளனர். இதனால், இந்த மலையில் வாழும் உயிரினங்களும் அரிய வகை மூலிகை செடிகளும் விலையுர்ந்த மரங்களும் எரிந்து சாம்பல் ஆகியுள்ளன.

இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த மலைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மலையில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதியோ கழிப்பட வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. இதனால் பக்தர்கள் கைகளில் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் வீசி எறிவதால் மலையில் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்துள்ளது.

மேலும், இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளும் மலைக்கு சென்று சில சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை காவல்துறையும் வனத்துறையும் கண்டு கொள்வதில்லை. இந்து அறநிலைத்துறை இங்கு வரும் பக்தர்களிடையே பணம் வசூலிப்பது குறியாக உள்ளதே தவிர மலைக்கோவில் முன்னேற்றத்திற்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை.

தொடர்ந்து, இந்த மலையை சுற்றியுள்ள மலைகளிலும் தீ வைப்பது தொடர் வாடிக்கையாக உள்ளது. இதை மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் கண்டு கொள்வதில்லை. உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை இந்தப் பகுதியிலே ஒரு சோதனை சாவடிகளை அமைத்து இது போன்ற சமூக விரோதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழக அரசு உடனே தலையிட்டு இயற்கை எழில் நிறைந்த இந்த மலைகளை குறி வைத்து தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து கைது செய்து மலைகள் உள்ள அரிய வகை மூலிகைகளையும் மரங்களையும் உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: hindu munnani
ShareTweetSendShare
Previous Post

மகா சிவராத்திரி! – நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

வெள்ளியங்கிரி மலையில் அடிப்படை வசதிகள் தேவை – ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies