பிரதமர் திறந்து வைத்த சேலா சுரங்கப்பாதை : இவ்வளவு சிறப்புமிக்கதா?
Oct 26, 2025, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் திறந்து வைத்த சேலா சுரங்கப்பாதை : இவ்வளவு சிறப்புமிக்கதா?

Web Desk by Web Desk
Mar 9, 2024, 01:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதையை இன்று திறந்து வைத்தார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் நடந்த ‘விக்சித் பாரத் – விக்சித் வடகிழக்கு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை இன்று திறந்துவைத்தார்.

825 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை, சீனாவுடனான உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகே உள்ள தேஜ்பூரை தவாங் பகுதியுடன் இணைக்கிறது.

இந்நிலையில் தற்போது இந்த சேலா சுரங்கப்பாதை பற்றிய 6 தகவல்கள் குறித்து பார்ப்போம் :

1. சேலா சுரங்கப்பாதை 13,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையாகும்.

2. இதில் ஒரு சுரங்கப்பாதை 1003 மீட்டர் நீளமும், மற்றொரு சுரங்கப்பாதை 1,595 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த சுரங்கப்பாதையில் அதிக சக்தி கொண்ட மின் விளக்குகள், தீயணைப்பு வசதிகள். காற்று வசதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. இந்த சுரங்கப்பாதையால் தவாங்-டராங் இடையே பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும்.

3. இரு வழி சுரங்க பாதைகளில் ஒன்று போக்குவரத்து தேவைகளுக்காகவும், மற்றொன்று அவசரகால சேவைகளுக்காகவும் உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைகளுக்கு இடையேயான இணைப்புச் சாலை 1,200 மீட்டர் நீளம் கொண்டது.

4. எந்த மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் போக்குவரத்து பாதிக்காத வகையில் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது. ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையை பயன்படுத்தி இந்த பிரமாண்ட சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.

5. இந்திய சீன எல்லையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற சுமார் 90 லட்சம் மணி நேரங்களுக்கும் அதிகமான வேலை நேரம் தேவைப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தினமும் சராசரியாக 650 தொழிலாளர்கள் இந்த சுரங்க பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

6. சேலா கணவாய்க்கு கீழே 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சேலா சுரங்கப்பாதை குளிர்காலத்தில் கூட ஒரு முக்கிய பாதையை வழங்குகிறது. இந்தச் சுரங்கப்பாதையானது ராணுவ துருப்புக்கள், ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களை விரைவாக சீன-இந்திய எல்லையில் கொண்டு செல்ல உதவுகிறது என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

சிறப்புமிக்க இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசுகையில், காங்கிரஸ் 20 ஆண்டுகளில் செய்ததை பா.ஜ.க. 5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது என தெரிவித்தார்.

Tags: PM Modi inaugurates Selaworld’s longest bi-tunnel in Arunachal
ShareTweetSendShare
Previous Post

பா.ஜ.க 5 ஆண்டுகளில் செய்த பணிகளை செய்ய காங்கிரஸிக்கு 20 ஆண்டுகள் ஆகும்: பிரதமர் மோடி

Next Post

அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா! – பிரதமர் மோடி

Related News

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies