தேயிலை தோட்டத்தின் அழகை ரசித்த பாரத பிரதமர் மோடி!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேயிலை தோட்டத்தின் அழகை ரசித்த பாரத பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 9, 2024, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் வளர்ச்சிக்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இதில் ஒன்று இந்தியாவை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சி.

இந்தியா சுற்றுலா தலமாக மாறினால் பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ச்சி அடையும் என்பதற்காக பாரத பிரதமர் அயராது முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் முன்னதாக பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு பயணம் செய்து அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும் லட்சத்தீவ் இயற்கை அழகுடன் அதன் அமைதி மனம் மயங்க செய்கிறது என்ற சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டார்.

பின்னர் 108 வைணவத்தலங்களுள் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.

அங்கு கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்று ஆண்டாள் யானை பிரதமருக்கு மவுத் ஆர்கன் வாசித்துக் காண்பித்தது. தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்டார்.

பின்னர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்து வைத்தார். பின்னர் ராமர் கோவில் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டு தினமும் லட்ச கணக்கில் பக்தர்கள் சென்றுகொண்டுள்ளனர்.

பின்னர் குஜராத் மாநிலம் அரபிக் கடலில் மூழ்கிய துவாரகாவிற்கு சென்று பிரதமர் மோடி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் கிருஷ்ணருக்கு நெருக்கமான இந்த இடத்தில் பிரதமர் மோடி ஆழ்கடலில் ‛டைவ்’ அடித்து தரைப்பகுதிக்கு சென்று மயிலிறகை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார்.

அதேபோல் கேரளா சென்ற பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.

அதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்து பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனைசெய்ததை பாக்கியமாக உணர்கிறேன் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்துக்கு சென்ற பிரதமர் மோடி பூங்காவை சுற்றி பார்த்து பின்னர் மத்திய கோஹோரா மலைத்தொடரின் மிஹிமுக் பகுதியில் யானை சவாரி மேற்கொண்டார்.

பின்னர் பிரதமர் மோடி கவுகாத்தியில் ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார். தேயிலை தோட்டத்தில் சிறிது நேரம் தனது நேரத்தைச் செலவிட்டார். இந்தப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறுகையில், அசாம் அதன் அற்புதமான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. அசாம் தேநீர் உலகம் முழுவதும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசாம் செல்லும்போது இந்த தேயிலை தோட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதன் மூலம் அந்த பகுதியை பற்றி பாரத மக்களுக்கு மட்டுமின்றி உலகமுழுவதும் தெரியவந்துள்ளது. இந்தியர்கள் முதற்கொண்டு வெளிநாட்டவர்களும் அப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும். இது இந்தியா பொருளாதார நாடக வளர்ச்சி அடைய ஒரு பங்காக இருக்கும்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்த திமுக! – அண்ணாமலை கண்டனம்

Next Post

ஹவுதி படையின் 15 ட்ரான்களை அமெரிக்கா கடற்படை சுட்டு வீழ்த்தியது!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies