மஞ்சுமெல் பாய்ஸ் : திகிலூட்டும் உண்மை கதை - நடந்தது என்ன ?
Mar 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மஞ்சுமெல் பாய்ஸ் : திகிலூட்டும் உண்மை கதை – நடந்தது என்ன ?

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலில் உள்ள குணா குகை எனப்படும் டெவில்ஸ் கிட்சேன் குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து மஞ்சுமேல் பாய்ஸ் என்ற மலையாள படம் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் வெற்றிகரமாக ஓடுகிறது.

இப்படத்தை சிதம்பரம் எஸ்.பொடுவேல் என்பவர் இயக்கியுள்ளார். சோபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம், தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் 101 நாட்களுக்குள் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இப்படம் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் கதை :

கேரள மாநிலதை சேர்ந்த நண்பர்கள், கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்காக வருகின்றனர். அப்படி வருகையில், குணா படம் எடுக்கப்பட்ட குணா குகைக்கும் செல்கின்றனர். அதில், தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் அவர்களுள், ஒரு நண்பர் மட்டும் அக்குகையின் ஆபத்தான பகுதிக்குள் சிக்கி கொள்கிறார். அவரின் நிலை என்ன ஆனது? அவரை உயிருடன் மீட்டனரா? என்பதே இப்படத்தின் கதை.

உண்மையான மஞ்சுமெல் பாய்ஸ் கதை :

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவை சேர்ந்த சில நண்பர்கள் சுற்றுலா வந்தனர். அப்போது அவர்களில் சுபாஷ் என்பவர் 100 அடி ஆழ பள்ளத்தில் கால் தடுமாறி விழுந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு இந்த இடத்தில் விழுந்தவர்கள் யாருமே இதுவரை பிழைத்ததில்லை. எனவே நீங்களும் நண்பரை மறந்துவிட்டு சொந்த ஊருக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனாலும் பிடிவாதமாக இருந்த சுபாஷின் நண்பர்கள் தனது நண்பனை மீட்ட பிறகுதான் போவோம் என உறுதியாக இருந்தனர். தீயணைப்புத் துறையினர் குகைக்குள் இறங்க தயக்கம் காட்டினர்.

அப்போது சுபாஷின் நண்பர் சசி என்பவர் நான் இறங்குகிறேன் என முன் வந்தார். அவருடைய மற்ற நண்பர்களும் தீயணைப்புத் துறையினரும் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. பிறகு கயிற்றை கட்டிக் கொண்டு சசி இறங்கினார்.

60 அடி ஆழத்தில் சென்ற போதுசுபாஷ் ஒரு பாறை மீது விழுந்து கிடப்பதைப் பார்த்த அவர் தனது நண்பர் உயிருடன் தான் இருப்பதாக சத்தம்போட்டார்.

பின்னர் சுபாஷை சசி தனது உடலுடன்இறுக்கமாக கட்டிக் கொண்டார். அவர்களை தீயணைப்புப் படையினர் மெதுவாக மேலே இழுத்தனர்.

மயங்கியநிலையில் இருந்த சுபாஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மணி நேரப் போராட்டத்துக்குப்பின்னர், சுபாஷ் பத்திரமாக மீட்கப்பட்டதால் அவரது நண்பர்கள் சந்தோஷமடைந்தனர்.

இதையடுத்து சுபாஷை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுபாஷுக்கு நடந்தது என்ன என அவரது வீட்டில் கூட நண்பர்கள் சொல்லாமல் மறைத்து அருவியில் இருந்து அவர் விழுந்ததால் காயம் என்று மட்டுமே சொல்லியிருந்தனர். இது தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் உண்மையான கதையாகும்.

Tags: Manjumel Boys: The Terrifying True Story - What Happened?
ShareTweetSendShare
Previous Post

ஒரு ஜாபர் சாதிக் பிடித்தால் போதாது, அரசு நடத்தும் மது கடைகளையும் மூட வேண்டும்! – அண்ணாமலை

Next Post

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க நடவடிக்கை – பியூஸ் கோயல்!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies