மஞ்சுமெல் பாய்ஸ் : திகிலூட்டும் உண்மை கதை - நடந்தது என்ன ?
Sep 19, 2026, 10:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மஞ்சுமெல் பாய்ஸ் : திகிலூட்டும் உண்மை கதை – நடந்தது என்ன ?

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 03:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொடைக்கானலில் உள்ள குணா குகை எனப்படும் டெவில்ஸ் கிட்சேன் குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து மஞ்சுமேல் பாய்ஸ் என்ற மலையாள படம் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் வெற்றிகரமாக ஓடுகிறது.

இப்படத்தை சிதம்பரம் எஸ்.பொடுவேல் என்பவர் இயக்கியுள்ளார். சோபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம், தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் 101 நாட்களுக்குள் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இப்படம் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் கதை :

கேரள மாநிலதை சேர்ந்த நண்பர்கள், கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்காக வருகின்றனர். அப்படி வருகையில், குணா படம் எடுக்கப்பட்ட குணா குகைக்கும் செல்கின்றனர். அதில், தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் அவர்களுள், ஒரு நண்பர் மட்டும் அக்குகையின் ஆபத்தான பகுதிக்குள் சிக்கி கொள்கிறார். அவரின் நிலை என்ன ஆனது? அவரை உயிருடன் மீட்டனரா? என்பதே இப்படத்தின் கதை.

உண்மையான மஞ்சுமெல் பாய்ஸ் கதை :

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவை சேர்ந்த சில நண்பர்கள் சுற்றுலா வந்தனர். அப்போது அவர்களில் சுபாஷ் என்பவர் 100 அடி ஆழ பள்ளத்தில் கால் தடுமாறி விழுந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு இந்த இடத்தில் விழுந்தவர்கள் யாருமே இதுவரை பிழைத்ததில்லை. எனவே நீங்களும் நண்பரை மறந்துவிட்டு சொந்த ஊருக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனாலும் பிடிவாதமாக இருந்த சுபாஷின் நண்பர்கள் தனது நண்பனை மீட்ட பிறகுதான் போவோம் என உறுதியாக இருந்தனர். தீயணைப்புத் துறையினர் குகைக்குள் இறங்க தயக்கம் காட்டினர்.

அப்போது சுபாஷின் நண்பர் சசி என்பவர் நான் இறங்குகிறேன் என முன் வந்தார். அவருடைய மற்ற நண்பர்களும் தீயணைப்புத் துறையினரும் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. பிறகு கயிற்றை கட்டிக் கொண்டு சசி இறங்கினார்.

60 அடி ஆழத்தில் சென்ற போதுசுபாஷ் ஒரு பாறை மீது விழுந்து கிடப்பதைப் பார்த்த அவர் தனது நண்பர் உயிருடன் தான் இருப்பதாக சத்தம்போட்டார்.

பின்னர் சுபாஷை சசி தனது உடலுடன்இறுக்கமாக கட்டிக் கொண்டார். அவர்களை தீயணைப்புப் படையினர் மெதுவாக மேலே இழுத்தனர்.

மயங்கியநிலையில் இருந்த சுபாஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மணி நேரப் போராட்டத்துக்குப்பின்னர், சுபாஷ் பத்திரமாக மீட்கப்பட்டதால் அவரது நண்பர்கள் சந்தோஷமடைந்தனர்.

இதையடுத்து சுபாஷை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுபாஷுக்கு நடந்தது என்ன என அவரது வீட்டில் கூட நண்பர்கள் சொல்லாமல் மறைத்து அருவியில் இருந்து அவர் விழுந்ததால் காயம் என்று மட்டுமே சொல்லியிருந்தனர். இது தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் உண்மையான கதையாகும்.

Tags: Manjumel Boys: The Terrifying True Story - What Happened?
Share
Tweet
SendShare
Previous Post

ஒரு ஜாபர் சாதிக் பிடித்தால் போதாது, அரசு நடத்தும் மது கடைகளையும் மூட வேண்டும்! – அண்ணாமலை

Next Post

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க நடவடிக்கை – பியூஸ் கோயல்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies