வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் : யார் இவர்கள்?
Aug 20, 2025, 04:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் : யார் இவர்கள்?

Web Desk by Web Desk
Mar 10, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச கடல் வழியில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள் ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள். இந்நிலையில், ஹூதி கிளர்ச்சியாளர் என்றால் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு, ஷியா முஸ்லீமின் துணைப் பிரிவான ஜைதிகள் பிரிவை சேர்ந்த ஆயுதமேந்திய குழுவாகும். ஹூதிகள் இயக்கத்தை நிறுவிய ஹுசைன் அல்-ஹூதி என்பவரை நினைவு கூறும் வகையில் அந்த குழு ஹூதி கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக அன்சார் அல்லா என்று அழைக்கப்படும் ஹூதி இயக்கம், 1990ஆம் ஆண்டுகளில் ஏமனில் தோன்றிய ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல்-இராணுவ அமைப்பாகும். மேலும் இந்த குழு ஈரானின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.

1990 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலேவின் ஊழல் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

சன்னி இஸ்லாமியர்களிடம் இருந்து ஆட்சியை பிடித்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு எதிராக இயங்க நினைப்பதே ஹூதிகளின் தற்போதைய முக்கிய குறிக்கோளாகும்.

இந்நிலையில், சமீபகாலமாக ஹூதி போராளிகள் சர்வதேச கடல் வழிகளில் கொள்ளையடிப்பது, கப்பல்களை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரபிக்கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் இந்திய கடற்படை அரபிக்கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது. மேலும் இந்திய கடற்படை பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை அவர்களிடம் ருந்து காப்பற்றியும் உள்ளது.

மேலும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய இடங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன.

ஏமன் அரசை வீழ்த்திய பின்னர், 2014 முதல் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போரில் போராடி வருகின்றனர்.

2022 வரை இந்த போரினால் 377,000 பேர் பலியாகியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மில்லியன் மக்கள் இதனால் இடம்பெயர்ந்துள்ளனர்.

சவுதி அரேபியா இராணுவத்தின் ஆதரவுடன், அதிபர் சலே 2003 ஆம் ஆண்டு அந்த கிளர்ச்சிக் குழுவை அகற்ற முயன்றார், ஆனால் ஹூதிகள் அந்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர்.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற பிற பயங்கரவாத அமைப்புகளை போலவே இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான குழுவாக ஹூதிகள் இயங்கி வருகின்றனர்.

Tags: Houthi Rebels Attacking Merchant Ships: Who Are They?
ShareTweetSendShare
Previous Post

ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி சீர்திருத்தங்கள் அவசியம்! – இந்தியா வலியுறுத்தல்

Next Post

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : மும்பை 224 ரன்கள்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies