வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் : யார் இவர்கள்?
May 11, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் : யார் இவர்கள்?

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச கடல் வழியில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள் ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள். இந்நிலையில், ஹூதி கிளர்ச்சியாளர் என்றால் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு, ஷியா முஸ்லீமின் துணைப் பிரிவான ஜைதிகள் பிரிவை சேர்ந்த ஆயுதமேந்திய குழுவாகும். ஹூதிகள் இயக்கத்தை நிறுவிய ஹுசைன் அல்-ஹூதி என்பவரை நினைவு கூறும் வகையில் அந்த குழு ஹூதி கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக அன்சார் அல்லா என்று அழைக்கப்படும் ஹூதி இயக்கம், 1990ஆம் ஆண்டுகளில் ஏமனில் தோன்றிய ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல்-இராணுவ அமைப்பாகும். மேலும் இந்த குழு ஈரானின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.

1990 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலேவின் ஊழல் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

சன்னி இஸ்லாமியர்களிடம் இருந்து ஆட்சியை பிடித்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு எதிராக இயங்க நினைப்பதே ஹூதிகளின் தற்போதைய முக்கிய குறிக்கோளாகும்.

இந்நிலையில், சமீபகாலமாக ஹூதி போராளிகள் சர்வதேச கடல் வழிகளில் கொள்ளையடிப்பது, கப்பல்களை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரபிக்கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் இந்திய கடற்படை அரபிக்கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது. மேலும் இந்திய கடற்படை பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை அவர்களிடம் ருந்து காப்பற்றியும் உள்ளது.

மேலும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய இடங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன.

ஏமன் அரசை வீழ்த்திய பின்னர், 2014 முதல் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போரில் போராடி வருகின்றனர்.

2022 வரை இந்த போரினால் 377,000 பேர் பலியாகியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மில்லியன் மக்கள் இதனால் இடம்பெயர்ந்துள்ளனர்.

சவுதி அரேபியா இராணுவத்தின் ஆதரவுடன், அதிபர் சலே 2003 ஆம் ஆண்டு அந்த கிளர்ச்சிக் குழுவை அகற்ற முயன்றார், ஆனால் ஹூதிகள் அந்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர்.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற பிற பயங்கரவாத அமைப்புகளை போலவே இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான குழுவாக ஹூதிகள் இயங்கி வருகின்றனர்.

Tags: Houthi Rebels Attacking Merchant Ships: Who Are They?
ShareTweetSendShare
Previous Post

ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி சீர்திருத்தங்கள் அவசியம்! – இந்தியா வலியுறுத்தல்

Next Post

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : மும்பை 224 ரன்கள்!

Related News

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

அதிமுக பொதுச்செயலாளராக எஸ்.பி.வேலுமணி தேர்வு?

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்!

சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா பதவியேற்பு!

சேமிக்க முடியாத கச்சா எண்ணெய்யை கடலில் வெளியேற்றி வரும் ஈரான் – செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் போர் எதிரொலி – பெட்ரோல் பயன்பாட்டை குறைக்க வேண்டும், தங்கம் வாங்க வேண்டாம் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

எஸ்.பி வேலுமணி தலைமையில் தனி அணி ?; தீவிர ஆலோசனை

திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஜோசப் விஜய்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழகத்தின் கடன் உள்ளது – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக பதவியேற்றார் விஜய் – ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமனம்!

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

முதல்வராக பதவியேற்ற விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்து!

தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம்!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு – ஆனந்த கண்ணீரில் பெற்றோர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies