மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் கார் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் பகுதியில், போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த திரினாமூல் காங்கிரஸ் நிர்வாகிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த மமதா பானர்ஜி சென்றார். அப்போது, அவரது காரை சூழ்ந்துகொண்ட சிலர், மம்தா பானர்ஜிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, கற்களை வீசி தாக்கத் தொடங்கினர்.
போலீசார் தடுக்க முயன்றும் தொடர்ந்து தாக்குதலை நடத்தினர். சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, கார் கண்ணாடி திறந்திருந்தால், தனது தலை உடைந்திருக்கும் என்றும், காவல்துறையினர் முன்னிலையில் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம் என்றும் தெரிவித்தார்.
















