பெங்களூருவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 105 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு ஒயிட்பீல்டு, எலக்ட்ரானிக் சிட்டி பிரிவுகளில் இரு நாட்களாக ‘ஆபரேஷன் முக்தா’ என்ற பெயரில், போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் எந்தவொரு ஆவணமும் இன்றி பெங்களூரில் தங்கிகியருந்த வங்கதேசத்தினர் 105 பேர் சிக்கினர்.
அவர்கள் அனைவரும், வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விரைவில் அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















