ஏஐ. வந்துவிட்டதால் மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகக் கூடும் என, ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
கோவை ஈச்சனாரியில் சுதேசி மேளா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரீதர் வேம்பு, ஒரு காலத்தில் மென்பொருளை மனிதர்கள் உருவாக்கி வந்த நிலையில், தற்போது மென்பொருளை இயந்திரங்களே எழுதித் தரும் சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். 50 பேர் செய்யக்கூடிய வேலையை 2 பேரைவைத்தே செய்ய முடியும் என்றும், அதே நேரத்தில் அனைத்து மென்பொருள் பணிகளையும் இயந்திரங்களால் செய்ய முடியாது என்றும் கூறினார். தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் மாறினாலும், மனிதர்களின் தேவையை முழுமையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்களால் பூர்த்தி செய்ய முடியாது என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
















