உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்யும் கனமழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டி அதிகரித்துள்ளது. கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், காசி விஸ்வநாதர் கோயிலின் ‘கங்கா துவார்’ மூடப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கங்கா துவார் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கங்கை நதிக்கரையோர பகுதிகளில் மீட்புக்குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















