காவிரியில் நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறக்க வேண்டிய காவிரி நீரில் பற்றாக்குறை இருப்பதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு தமிழ்நாடு அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் முறையிட்டார்.
அந்த முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மனு மற்றும் அது தொடர்பான பிற மனுக்களும், வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உறுதி அளித்தது.
















