சென்னை கிண்டி அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
சென்னை கிண்டியில் அதிகாலை 3.30 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன், தனது நண்பருடன் விலை உயர்ந்த காரில் சென்றுள்ளார். ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருகே சென்றபோது பக்கவாட்டு சாலையில் வந்த மற்றொரு கார் அமீன் கார் மீது மோதி விபத்துக்குள்ளனானது.
இந்த விபத்தில் லேசான காயமடைந்த அமீன் மற்றும் அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மற்றொரு காரில் வந்த பயணியும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக இரு வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















