தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரசுத் துறை, கல்வி நிறுவன நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறினார்.
முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதனை அடுத்து தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
















