பாகிஸ்தான் புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அரசியல், பொருளாதார நெருக்கடி, தீவிரவாதம், வன்முறை என பல சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த பொதுத்தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்பட்டது.
265 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின. அந்நாட்டில் ஆட்சி அமைக்க, 133 இடங்கள் தேவை என்ற நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.
அக்கட்சிகளின் பிரதமர் வேட்பாளாராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே, ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவருக்கு எதிராக, இம்ரான் கான், பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சியின் தலைவர் முகமது கான் அசாக்சாய் என்பவர் அவரது கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற தேர்தலில், ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றுள்ளார். இவர் பாகிஸ்தானின் 14-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு விழா நாளை நடைபெற உள்ளது.