டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத் தொகை!
Jan 22, 2026, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத் தொகை!

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரருக்கு ஒரு போட்டிக்கு ₹45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இதை தொடர் முடிவடைந்ததும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத்தொகை திட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார்.

அதாவது தற்போது ஐபிஎல் போன்ற டி20 தொடர்களின் வருகையால் பல வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

அதன் உச்சமாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள் என்று ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் ஆகிய 2 வீரர்களை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ஜெய் ஷா ஆகியோர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதை செய்யத் தவறியதால் அவர்களை 2023 – 24 இந்திய அணியின் மத்திய சம்பளப் பட்டியலில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது.

அதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக தற்போது பிசிசிஐ இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ஒரு வருடத்தில் இந்தியாவுக்காக 75% மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளத்துடன் ஒரு போட்டிக்கு 45 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

மேலும் அதே 75% போட்டிகளில் தேர்வாகி பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கும் 22.5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

அத்துடன் 50% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போட்டி ஒன்றுக்கு 30 லட்சம் ஊக்கத் தொகையும் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு 15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. அது போக 50% குறைவான போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் 15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஏற்கனவே கொடுக்கும் சம்பளத்தை தாண்டி 40 கோடிகளை அதிகமாக பிசிசிஐ வழங்கவுள்ளது.

மேலும் இந்த திட்டம் 2022 – 23 சீசன் முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு ஜெய் ஷா போன்ற தலைவர்கள் ஒவ்வொரு நாட்டு வாரியத்திலும் இருப்பது அவசியம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

Tags: Test Cricket: Incentives for Indian Test Cricketers!
ShareTweetSendShare
Previous Post

போதைப் பொருட்கள் கடத்தும் கட்சியாக திமுக மாறிவிட்டது! – எல். முருகன் குற்றச்சாட்டு

Next Post

ஜாபர் சாதிக்கிற்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

Related News

தேவையற்ற இடத்தில் பல லட்சத்தில் பேருந்து நிறுத்தம் – அரசு நிதி வீணா?

அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா? -சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம்

சென்னை – துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மார்ச் முதல் நிறுத்தம்

காசா அமைதிக் குழுவில் இணையப்போகும் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம்!

தெருவோரக் குழந்தைகளின் படிப்புக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த பெண்மணி!

மகப்பேறு மரணங்களைக் குறைக்கும் நோக்கில், ‘போடா கேர்ள்ஸ்’ அமைப்பு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனி பொழிவு!

ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி – தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்

வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை!

தமிழ்ஜனம் செய்தி எதிரொலி – குப்பை கழிவுகள் அகற்றம்

உதயநிதியின் தேசவிரோதக் கருத்துகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்! -பியூஷ் கோயல்

யாருடைய திட்டங்களையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை – இபிஎஸ்

பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது 5 லட்சம் பேர் – எச்.ராஜா

மதுராந்தகத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies