டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத் தொகை!
Jun 4, 2026, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத் தொகை!

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரருக்கு ஒரு போட்டிக்கு ₹45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இதை தொடர் முடிவடைந்ததும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத்தொகை திட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார்.

அதாவது தற்போது ஐபிஎல் போன்ற டி20 தொடர்களின் வருகையால் பல வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

அதன் உச்சமாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள் என்று ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் ஆகிய 2 வீரர்களை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ஜெய் ஷா ஆகியோர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதை செய்யத் தவறியதால் அவர்களை 2023 – 24 இந்திய அணியின் மத்திய சம்பளப் பட்டியலில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது.

அதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக தற்போது பிசிசிஐ இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ஒரு வருடத்தில் இந்தியாவுக்காக 75% மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளத்துடன் ஒரு போட்டிக்கு 45 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

மேலும் அதே 75% போட்டிகளில் தேர்வாகி பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கும் 22.5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

அத்துடன் 50% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போட்டி ஒன்றுக்கு 30 லட்சம் ஊக்கத் தொகையும் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு 15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. அது போக 50% குறைவான போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் 15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஏற்கனவே கொடுக்கும் சம்பளத்தை தாண்டி 40 கோடிகளை அதிகமாக பிசிசிஐ வழங்கவுள்ளது.

மேலும் இந்த திட்டம் 2022 – 23 சீசன் முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு ஜெய் ஷா போன்ற தலைவர்கள் ஒவ்வொரு நாட்டு வாரியத்திலும் இருப்பது அவசியம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

Tags: Test Cricket: Incentives for Indian Test Cricketers!
ShareTweetSendShare
Previous Post

போதைப் பொருட்கள் கடத்தும் கட்சியாக திமுக மாறிவிட்டது! – எல். முருகன் குற்றச்சாட்டு

Next Post

ஜாபர் சாதிக்கிற்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies