‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை இந்தியா அடைவதற்கு தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறந்த தனியார் தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்திய இயக்குநர்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
பின்னர் விழா மேடையில் உரையாற்றிய அவர் தொழில் மற்றும் வணிக மரபில் இந்தியா பல ஆண்டுகளாக முன்னிலை வகித்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் மோடி வலியுறுத்தி வரும் விக்சித் பாரத் 2047 என்ற இலக்கை அடைய தொழில் நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
















