மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, கல்வித்துறையானது மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வான பிரஹலாத் ஜோஷி ஏற்கெனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகம் என பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை தன்வசம் வைத்திருக்கிறார்.
போட்டித் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையை மறுசீரமைத்து, அடுத்த ஆண்டு கணினி வழியில் நீட் தேர்வை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுவரும் சூழலில், அந்தத் துறையின் அமைச்சராக 5 முறை எம்.பி.யான பிரஹலாத் ஜோஷி நியமிக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
















