முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புதிய அலுவலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் அறைகள் பிரத்யேகமாக தயாராகி வருகின்றன. இதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்ட அரங்கத்தை உடைத்து அங்குள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி நடைபெறுகிறது. நிதித்துறைக்கு சொந்தமான விருதுகள், சாமி சிலைகள் உள்ளிட்டவை அகற்றப்படுகின்றன. முதலமைச்சர் அறையில் இருந்து பார்த்தால் தலைமைச் செயலகம் முழுவதும் தெரியும் அளவிற்கு, பத்தாவது தளம் அமைந்துள்ளது.
முதலமைச்சரின் புதிய அறையில் இருந்து மெரினா கலங்கரை விளக்கம், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை துறைமுகம் போன்றவை தெரியும் வசதி உள்ளது. முதலமைச்சரின் அலுவலகம், தனிச்செயலாளர்களின் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு அடுத்த மாத இறுதியில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















