WPL : RCB அதிர்ச்சி தோல்வி - கண்ணீர் சிந்திய வீராங்கனை!
Jan 14, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : RCB அதிர்ச்சி தோல்வி – கண்ணீர் சிந்திய வீராங்கனை!

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 17வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஜெமிமா 58 ரன்களை அடித்தார். அதேபோல் ஆலிஸ் கேப்ஸி 48 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அதேபோல் மெக் லானிங் 29 ரன்களிலும், ஷாபாலி வர்மா 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயன்கா படேல் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் சோபனா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்த அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான சோஃபி மோலினக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சோஃபி டெவின் – ரிச்சா கோஷ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சில ஓவர்கள் நிதானம் காட்டிய இருவரும், 15வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தனர்.

அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் விளாசப்பட, ஆர்சிபி அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி 3 ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது.

அப்போது டெவின் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பொறுப்பை ரிச்சா கோஷ் எடுத்து கொண்டார். இதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவையாக இருந்தது.

ஷிகா பாண்டே வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 11 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கப்பட, 4வது பந்தில் 2 ரன்களும், 5வது பந்தில் மீண்டும் ஒரு சிக்சரும் விளாசப்பட்டது.

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரிச்சா கோஷ் முதல் ரன்னை எடுக்க ஓடிய போது ரன் அவுட் செய்யப்பட்டார்.

29 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 51 ரன்கள் எடுத்த ரிச்சா கோஷ், ஆர்சிபி அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்று கண்ணீர் சிந்தினார்.

இதனையடுத்து அவருக்கு டெல்லி அணியின் ஜெமீமா ரோட்ரிக்ஸ் ஆறுதல் கூறினார். இந்த வெற்றியின் மூலமாக டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Tags: WPL : RCB's shock defeat - player in tears!
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை அருகே ரூ. 71 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்!

Next Post

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies