WPL : RCB அதிர்ச்சி தோல்வி - கண்ணீர் சிந்திய வீராங்கனை!
Jul 30, 2026, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : RCB அதிர்ச்சி தோல்வி – கண்ணீர் சிந்திய வீராங்கனை!

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 17வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஜெமிமா 58 ரன்களை அடித்தார். அதேபோல் ஆலிஸ் கேப்ஸி 48 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அதேபோல் மெக் லானிங் 29 ரன்களிலும், ஷாபாலி வர்மா 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயன்கா படேல் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் சோபனா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்த அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான சோஃபி மோலினக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சோஃபி டெவின் – ரிச்சா கோஷ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சில ஓவர்கள் நிதானம் காட்டிய இருவரும், 15வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தனர்.

அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் விளாசப்பட, ஆர்சிபி அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி 3 ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது.

அப்போது டெவின் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பொறுப்பை ரிச்சா கோஷ் எடுத்து கொண்டார். இதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவையாக இருந்தது.

ஷிகா பாண்டே வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 11 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கப்பட, 4வது பந்தில் 2 ரன்களும், 5வது பந்தில் மீண்டும் ஒரு சிக்சரும் விளாசப்பட்டது.

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரிச்சா கோஷ் முதல் ரன்னை எடுக்க ஓடிய போது ரன் அவுட் செய்யப்பட்டார்.

29 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 51 ரன்கள் எடுத்த ரிச்சா கோஷ், ஆர்சிபி அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்று கண்ணீர் சிந்தினார்.

இதனையடுத்து அவருக்கு டெல்லி அணியின் ஜெமீமா ரோட்ரிக்ஸ் ஆறுதல் கூறினார். இந்த வெற்றியின் மூலமாக டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Tags: WPL : RCB's shock defeat - player in tears!
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை அருகே ரூ. 71 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்!

Next Post

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies