குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில்,அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மைசூரு- டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் (சென்னை), பூரி-விசாகப்பட்டினம், லக்னோ – டேராடூன், உள்ளிட்ட பத்து புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, கஜுராஹோ- டெல்லி (நிஜாமுதீன்). அகமதாபாத்-ஜாம்நகர் வந்தே பாரத் உட்பட நான்கு வந்தே பாரத் ரயில்களின் விரிவாக்கத்தையும் மோடி தொடங்கி வைத்தார். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரு.85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.