மும்பை தொடர் குண்டு வெடிப்பு தினம் : இன்று கடைபிடிப்பு!
Jun 7, 2025, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தினம் : இன்று கடைபிடிப்பு!

Web Desk by Web Desk
Mar 12, 2024, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை தொடர் குண்டு வெடிப்பின் 31-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. மும்பை பங்குச் சந்தைக் கட்டிடம், மஸ்ஜித்-மாண்ட்வி கார்ப்பரேஷன் வங்கிக் கிளை, ஜவேரி பஜார், பிளாசா சினிமா, கதா பஜார், செஞ்சுரி பஜார், ஹோட்டல் சீ ராக் உள்ளிட்ட 13 இடங்களில் பிற்பகல் 1:30 மணி முதல் 3:40 மணி வரை தொடர்ந்து குண்டுகள் வெடித்தன.

இந்த கொடிய தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர்  காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் முதல்முறையாக  ஆர்டிஎக்ஸ் என்ற வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த தொடர் குண்டுவெடிப்பை டைகர் மேமனின் உதவியுடன் நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் நடத்தினான். மேமன் மும்பையில் உள்ள தனது குடியிருப்புகள் மற்றும் கேரேஜ்களை தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு மூலம் மும்பை தாதாவாக அறியப்பட்ட தாவூத் இப்ராகிம் சர்வதேச தீவிரவாதியாக உருவெடுத்தான்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதற்கு பழிவாங்க தாவூத் இப்ராகிமும், டைகர் மேமனும் மும்பையில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் பல இடங்களில் கூட்டங்களை நடத்தி, துபாய் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கி மும்பையில் குண்டுகள் புதைக்கப்பட்டு பின்னர் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

Tags: dawood ibrahimMumbai serial blastBombay Stock ExchangeTiger Memon
ShareTweetSendShare
Previous Post

ரமலான் நோன்பு!- வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

Next Post

அண்ணாமலையை சந்தித்த பாரிவேந்தர்!

Related News

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

Load More

அண்மைச் செய்திகள்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

கர்நாடகா : அரசு நகர பேருந்தில் தீ விபத்து – உயிர் தப்பிய பயணிகள்!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

பஞ்சாப் : யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்!

கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,364 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies