கோவை - பின்வாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - அண்ணாமலை காரணமா?
Jan 14, 2026, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை – பின்வாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – அண்ணாமலை காரணமா?

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 08:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மக்களவைத் தொகுதியை இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பயந்துபோய் கைகழுவிட்டது. இதற்கு, அந்த தொகுதியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடலாம் என்ற பயமே காரணம் என கூறப்படுகிறது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பெருமைப் பெற்றது கோயமுத்தூர். இந்த மாவட்டத்தில், கனரக வாகனங்கள், வெட் கிரைண்டர், தண்ணீர் பம்புகள் மற்றும் துணி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், தற்போது இந்த மாவட்டத்தில் ஐடி நிறுவனங்கள் எதிர்பார்த்தைவிட சிறப்பாக செயல்பட்டு வருவதால், கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. குறிப்பாக, தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் நிறைந்த மாவட்டமாக உள்ளது.

இந்த தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

இங்கு 1957 முதல் 2019 வரை 17 முறை நடைபெற்ற எம்பி தேர்தலில் 5 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தொகுதியில், இந்த தொகுதியில் மீண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை, இந்த தொகுதியை சிபிஎம் கை கழுவிட்டது. அதற்கு காரணம், இந்த தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியானது.

இதனால், பாஜகவிடம் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில், தொகுதியை திமுகவிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது சிபிஎம்.

இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இதில், மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டியிடுகிறது. கோவை தொகுதியை நாங்கள் விட்டுக் கொடுத்தோம். திண்டுக்கல் தொகுதியை திமுக விட்டுக்கொடுத்தது என்றார்.

மேலும், கடந்த முறை போட்டியிட்ட கோவை மக்களவை தொகுதியை விரும்பி கொடுக்க திமுக முன்வந்தபோதும், அதை மறுத்து, மாநிலங்களவை சீட் வாங்கிக் கொண்டு நடிகர் கமல் சைலண்ட் ஆகிவிட்டார்.

ஓ…இதுதான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதோ?

Tags: bjpbjp k annamalaikovaiCPIM
ShareTweetSendShare
Previous Post

கைது அபாயத்தில் முன்னாள் டிஜிபி – காரணம் இதுதான்!

Next Post

பிரிட்டன் பிரதமருடனான உரையாடல் இனிமையாக இருந்தது : பிரதமர் மோடி

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies