WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 19-வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

இதில் அதிகபட்சமாக சஜீவன் சஜனா 30 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க ஹேலி மேத்யூஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பிரியங்கா பாலா 19 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இதில் தொடக்க வீராங்கனைகளாக ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் சோஃபி மோலினக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் சோஃபி மோலினக்ஸ் 4வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் ஸ்ம்ரிதி மந்தனா 11 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சோஃபி டெவின் 4 விக்கெட்களில் ஆட்டமிழக்க 6வது ஓவர் முடிய பெங்களூரு அணி 39/3 என்ற நிலையில் இருந்தது.

பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி மற்றும் ரிச்சா கோஷ் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கியது. இறுதியாக எல்லிஸ் பெர்ரி 5 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 40 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

15 ஓவர்கள் முடிய பெங்களூர் அணி 3 இக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்து வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் இப்போட்டியில் ஆட்டநாயகி விருது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் எல்லிஸ் பெர்ரிக்கு வழங்கப்பட்டது.

Tags: WPLWPL: Royal Challengers Bengaluru team win!
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் – முழு விவரம்!

Next Post

அதிசயம், ஆனால் உண்மை : சிவன் கோவில் லிங்கம் மீது சூரிய ஒளி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies