மொரிஷியஸ் அதிபர் ரூபன், பிரதமர் ஜுனத் ஆகியோரை சந்தித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
Jan 14, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொரிஷியஸ் அதிபர் ரூபன், பிரதமர் ஜுனத் ஆகியோரை சந்தித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொரிஷியஸ் தீவில் அதிபர் ரூபுன், பிரதமர் ஜுக்னவுத் ஆகியோரை குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது முதல் அரசுமுறைப் பயணமாக மார்ச் 11 அன்று மொரிஷியஸ் சென்றடைந்தார். சர் சீவூசாகுர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மொரிஷியஸ் மூத்த பிரமுகர்கள் முழு அரசு மரியாதையுடன் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

அன்றைய தினத்தின் முதல் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர்  திரெளபதி முர்மு, மொரிஷியஸ் அதிபர் பிருத்விராஜ்சிங் ரூபுனை அரசு மாளிகையான லீ ரெடுயிட்டில் சந்தித்தார்.

தனித்தன்மை வாய்ந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-மொரீஷியஸ் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். கடந்த ஆண்டு மாநில இல்லத்தின் மைதானத்தில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைகள் தோட்டத்தையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.

பின்னர், பாம்பிளவுஸ் சேர் சீவசாகுர் ராம்கூலம் தாவரவியல் பூங்காவிற்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சேர் சீவசாகுர் ராம்கூலம் மற்றும் சேர் அனிரூத் ஜக்நாத் ஆகியோரின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மாலையில் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் குடியரசுத் தலைவரை வரவேற்று அவரை கௌரவிக்கும் வகையில் விருந்து அளித்தார்.

விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

சுதந்திரம் பெற்ற குறுகிய காலத்தில், மொரிஷியஸ் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும், பன்முகத்தன்மையின் அடையாளமாகவும், வளமான நாடாகவும், மதிப்புமிக்க சர்வதேச நிதி மையமாகவும், செழிப்பான சுற்றுலாத் தலமாகவும், மிக முக்கியமாக உலகின் பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடுகளிலும் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

“மொரீஷியஸ் அதிசயமாக” பொருளாதாரத்தை மாற்றிய தொலைநோக்கு பார்வைக் கொண்ட மொரீஷியஸ் தேச நிர்மாணிப்பாளர்கள் ஆப்பிரிக்காவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் உத்வேகம் அளிக்கின்றனர் என்று அவர் பாராட்டினார்.

மொரீஷியஸில் தங்களது சகோதர, சகோதரிகளின் வெற்றியால் இந்தியர்கள் பெருமிதம் கொள்வதாக குடியரசுத் தலைவர் கூறினார். நமது இரு அரசுகளும் ஒருவருக்கொருவர் முன்னுரிமை அளித்து, இந்த உறவில் முதலீடு செய்வதால், சமீபத்திய ஆண்டுகளில் நமது இருதரப்பு உறவுகளில் விரைவான முன்னேற்றம் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

மொரிஷியஸுக்கு ஒரு புதிய சிறப்பு ஏற்பாட்டையும் அவர் அறிவித்தார். இதன் கீழ், 7-வது தலைமுறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொரீஷியர்கள் இப்போது இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமைக்கு தகுதி பெறுவார்கள். இது பல இளைய மொரீஷியஸ் மக்கள் தங்கள் மூதாதையர்களின் நிலத்துடன் மீண்டும் இணைக்க உதவும்.

வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், மொரிஷியஸ் போன்ற நெருங்கிய கூட்டாளிகளை நம்முடன் தொடர்ந்து இணைத்துக் கொள்வோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். “வசுதைவ குடும்பகம்” மற்றும் “சர்வஜன சுகின பவந்து” ஆகிய முக்கிய மாண்புகளைப் பின்பற்றி, உலக அமைதி மற்றும் செழிப்புக்கான ஆதாரமாக இந்தியா தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவித்தார்.

Tags: President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு தடை – மத்திய அரசு அதிரடி!

Next Post

பங்குனி உத்திர திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies