குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என மாநிலங்கள் கூற முடியாது : அமித் ஷா திட்டவட்டம்!
Jul 26, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என மாநிலங்கள் கூற முடியாது : அமித் ஷா திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Mar 14, 2024, 10:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்து முடியாது என மாநிலங்கள் கூற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் செய்தி  நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, ராகுல் காந்தி, மம்தா அல்லது கெஜ்ரிவால் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பொய் அரசியலில் ஈடுபடுகின்றன.  பாஜக தனது 2019 தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டம்  கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தோம்.

அந்த வாக்குறுதியின் கீழ், குடியுரிமை (திருத்தம்) மசோதா 2019 இல் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கோவிட் காரணமாக அது தாமதமானது. எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக பிரச்சினை கிளப்புகின்றன என தெரிவித்தார்.

சிஏஏ அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற கூற்றை நிராகரித்த ஷா, அவர்கள் எப்போதும் 14வது பிரிவைப் பற்றி பேசுகிறார்கள். அந்த சட்டப்பிரிவில் இரண்டு உட்பிரிவுகள் இருப்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள் என்றார்.

இண்டி கூட்டணி ஆட்சிக்கு வராது என்பது அவர்களுக்கும் தெரியும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் குடியுரிமை திருத்த சட்டம்  கொண்டு வந்தது. சிஏஏவை ரத்து செய்வது சாத்தியமற்றது.இது முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டம்.

உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்கவில்லை. சிஏஏவை அமல்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை உத்தவ் தாக்கரே தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர் சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக அரசியல் செய்து வருகிறார்.

சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிக்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு எதிராக கெஜ்ரிவால் குரலெழுப்புகிறார்.

அவர்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை இழந்து விட்டு, அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்கள். நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு இன்றி அவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் நாம் இரக்கம் காட்ட கூடாது? அவர்களுடைய நாடுகளில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு நம் நாட்டுக்கு வந்தவர்கள் மீது கெஜ்ரிவால் போன்ற தலைவர்களுக்கு இரக்கமே இல்லை என்றும் கூறினார்.

CAA மற்றும் NRC ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு,  “NRC க்கும் CAA க்கும் எந்த தொடர்பும் இல்லை. அஸ்ஸாம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் CAA செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். .

சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை. குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால் மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Tags: amith shahcaahome ministry
ShareTweetSendShare
Previous Post

Google chrome பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை!

Next Post

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies