WPL : இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ்!
Sep 9, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ்!

Web Desk by Web Desk
Mar 14, 2024, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 20-வது மற்றும் கடைசி லீக் போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக பாரதி 42 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் கேத்ரின் எம்மா பிரைஸ் 28 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 21 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மரிசான் கேப், ஷிகா பாண்டே மற்றும் மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஜெஸ் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதை தொடர்ந்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. இந்த அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மெக் லென்னிங் 18 ரன்கள் எடுத்த இந்நிலையில் ரன் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய கேப்ஸி டக் அவுட் ஆனார். இந்நிலையில் மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷாபாலி வர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

அதேபோல் அவருடன் ஜெமிமா கூட்டணி சேர்ந்து குஜராத் பந்தை அடித்து நொறுக்கினர். பின்னர் ஷாபாலி வர்மா 13வது ஓவரில் 7 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 71 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் ஜெமிமா 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 38 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் டெல்லி அணி 13வது ஓவர் முடிய 3 விக்கெட்கள் இழப்பிற்கு 129 ரன்களை எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருதுஷாபாலி வர்மாவுக்கு கொடுக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதல் னையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது. அதில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதும்.

Tags: WPLWPL: Delhi Capitals qualified for the finals!
ShareTweetSendShare
Previous Post

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்!

Next Post

டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தலைமையில் பா.ஜ.க-வில் இணைந்த திருநங்கைகள்

Related News

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies