மத்தியப் பிரதேசத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சிங்ராலி அருகே மதியம் 1.48 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சிங்ராலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால், அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, திருப்பதியில் நேற்று இரவு 8.43 மணிக்கு, 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சென்னையின் ஒரு சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.