ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜார்கண்ட் மாநில மக்களிடம் நல்ல உற்சாகம் இருப்பதை உணர்கிறேன். இங்குள்ள 14 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும்.
மாநில அரசின் ஊழல் மற்றும் அராஜகத்தால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரப் பட்டியலை சமர்ப்பித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டும்.
நாட்டு மக்கள் தற்போது சமூக அரசியல் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். சில குற்றச்சாட்டுகளை சொல்லி அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது.
குடியுரிமை திருத்த சட்டம் இந்திய குடிமக்களின் பதிவேடு, மத அடிப்படையில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் ஒரு முஸ்லீமை துன்புறுத்த முடியாது. யாராவது இந்திய குடியுரிமை பெற விரும்பினால், ஒரு செயல்முறை உள்ளது. அதற்கு யாருக்கும் தடை இல்லை. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் நீதி மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அரசியல் செய்கிறோம் என ராஜ்நாத் சிங் கூறினார்.