WPL : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB !
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB !

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு  நுழைந்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 21-வது போட்டியான அரையிறுதி போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்தது.

இதில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் சோஃபி மோலினக்ஸ் தலா 10 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய திஷா டக் அவுட் ஆனார்.

அதேபோல் மற்ற வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 66 ரன்களை எடுத்து அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.

மும்பை அணியை பொறுத்த வரை  சைகா இஷாக், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், மத்தியூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 136 என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா 19 ரன்களிலும், மத்தியூஸ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  பின்னர் களமிறங்கிய  நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.  மும்பை இந்தியன்ஸ் அணி நீதமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தது.

மும்பை அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 116 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது களத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமேலியா கேர் இருந்தனர்.

கடைசி 3 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்றே அனைவரும் எண்ணினர். ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்ததோடு ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Tags: RCBMIRCB into finalsWPL
ShareTweetSendShare
Previous Post

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும், ஆதரவும் ஊக்கம் அளிக்கிறது : குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

Next Post

PM Shri பள்ளிகள் : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies