மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இங்கிலாந்தில் உள்ள அக்கட்சி ஆதரவாளர்கள் சார்பில்ர கார் பேரணி நடைபெற்றது.
மக்களவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதனையடுத்து மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலானா தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என தேர்த்லுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் பாஜவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், லண்டனில் கார் பேரணி நடைபெற்றது. Overseas Friends of BJP UK ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் சுமார் 250 கார்கள் பங்கேற்றன.நார்த்டோல்ட்டில் உள்ள கட்ச் லேவா படிதார் சமாஜ் வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி வெம்ப்லியில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் முடிவடைந்தது.