காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை! - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Jan 14, 2026, 06:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 18, 2024, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக அரசு மக்களின் அரசு, சேவை மனப்பான்மையுன் பாஜக செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். அப்போது பிரதமர் மோடி தெலுங்கில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,

வரும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றுபாஜக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். 3-வது முறையாக பாஜககூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். பாஜகவில் பல கட்சிகள் இணைவதால் நாம் கண்டிப்பாக 400 என்ற இலக்கை கடக்க வேண்டும். பாஜக அரசு மக்களின் அரசு. சேவை மனப்பான்மையுன் பாஜக செயல்பட்டு வருகிறது.

ஏழைகள் குறித்து ஆலோசிக்கும் பாஜக, கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளது. எங்களுக்கு வாக்களித்து தற்போதைய ஜெகன் அரசு மீதுள்ள கோபத்தை மக்கள் தீர்த்துக் கொள்ளலாம். ஆந்திராவை கல்வியின் மாநிலமாக மாற்றுவதே எங்கள் லட்சியம். பாஜக கூட்டணியில் அனைத்து கட்சியினரையும் நாம் ஒரு குடையின் கீழ் அரவணைத்து கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்கள் சுயநலமாக கூட்டணி அமைத்துள்ளனர்.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி எவ்வித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் கூட்டணி வைத்துள்ளது. ஸ்ரீ ராமருக்கு நாம் அயோத்தியில் கோயில் எழுப்பி உள்ளோம். ஸ்ரீ ராமர் அல்லது ஸ்ரீ கிருஷ்ணர் என்றால் நம் கண் முன் நிற்பவர் என்.டி.ராமாராவ். அவர் தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், அப்போது இருந்த காங்கிரஸார் அவருக்கு எவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்தினர் என்பது மக்களுக்கு தெரியும்.

ஆனால், எங்கள் அரசு என்டிஆர் பெயரில் 2 முறை நாணயங்களை வெளியிட்டது. இதேபோன்று முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவையும் காங்கிரஸார் அவமானப்படுத்தினர். ஆனால், நரசிம்மராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி பாஜக அரசு கவுரவித்தது.

ஆந்திர மக்கள் 2 உறுதியை ஏற்க வேண்டும். மத்தியில் பாஜகவை 3-வது முறையாக ஆட்சியில் அமர்த்துவது. 2-வதாக கடந்த 5 ஆண்டுகளாக உங்களை கஷ்டத்தில் தள்ளியவர்களை நிராகரிப்பது. இவை இரண்டும் நிறைவேற வேண்டுமானால் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

ஆந்திராவில் ஜெகன் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றேதான். இந்த இரண்டு கட்சி தலைவர்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான். இதனால் நமதுவாக்குகளை சிதற விடாமல் கவனமாக பதிவு செய்ய வேண்டும். வரப்போகும் 5 ஆண்டு காலம் நமக்கு மிகவும் முக்கியமான காலம். மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக கூட்டணி இருந்தால், மாநில வளர்ச்சி நன்கு அமையும் எனத் தெரிவித்தார்.

Tags: PM ModiAndra Pradesh
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாண்ட்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்!

Next Post

சென்னையில் ஜாபர் சாதிக்! – டெல்லி போலீசாரின் நெக்ஸ்ட் மூவ்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies