அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி பிரிக்க முடியாத பகுதியாக எப்போதும் இருக்கும் என சீனாவின் உரிமைகோரலுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மீது அபத்தமான உரிமைகோரல்களை முன்வைத்து, சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் கவனித்தோம்”.
Our response to media queries on comments made by the Spokesperson of the Chinese Defence Ministry regarding Arunachal Pradesh:https://t.co/tCzhr8MG3C pic.twitter.com/MS86ssZbM9
— Randhir Jaiswal (@MEAIndia) March 19, 2024
“இது சம்பந்தமாக ஆதாரமற்ற வாதங்களைத் திரும்பத் திரும்பக் கூறுவது, அத்தகைய கூற்றுகளுக்கு செல்லுபடியாகாது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது, எப்போதும் இருக்கும். எங்கள் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களால் அதன் மக்கள் தொடர்ந்து பயனடைவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தில் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.