இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக காங்கிரஸ் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‘சக்தி’ பற்றி பேசியதற்காகவும், மின்னணு ஓட்டு இயந்திரத்தை குறை கூறியதற்காகவும், பா.ஜ., சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி ‘சக்தி’ குறித்து பேசிய கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “நடத்தை விதிகளை மீறியதற்காக” காங்கிரஸ் தலைவர் மற்றும் அவரது கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே போல் சமூக ஊடகப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காகவும், மின்னணு ஓட்டு இயந்திரத்தை குறை கூறியதற்காகவும், பா.ஜ., சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராகுல் காந்தியின் கருத்திற்கு, பிரதமர் மோடியே எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார், “இந்திய கூட்டணி சக்தியை அழிக்க விரும்புவதாக அறிவித்தது” என்று குற்றம் சாட்டினார். அவர்கள் சக்தியை அழிக்க விரும்பினால், சக்தியை வழிபடுவதே நமது உறுதி என்று மோடி தெரிவித்தார்.