மனித குலத்திற்கான சத்குரு ஜக்கி வாசுதேவின் இடைவிடாத சேவையைத் தொடர அவர் விரைவாக மீண்டு வர வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக் கசிவு காரணமாக, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Wishing Shri @SadhguruJV avl a speedy recovery from the unforeseen health condition. My prayers are always with Sadhguru avl and all his followers for his quick bounce back to continue his relentless service for humanity. pic.twitter.com/4QOgDp2I6k
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 20, 2024
சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலையில் இருந்து விரைவில் மீண்டு வர எனது பிரார்த்தனைகள். எனது பிரார்த்தனைகள் சத்குருவுக்கு இருக்கும். எப்போதும் மனித குலத்திற்கான அவரது இடைவிடாத சேவையைத் தொடர அவர் விரைவாக மீண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.