பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்
Sep 12, 2026, 10:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

Murugesan M by Murugesan M
Nov 15, 2025, 09:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் தேர்தலில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சூறாவளி பிரசாரம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வாரி வழங்கியிருக்கிறது. மறுபுறம், அகிலேஷ் யாதவை பிரசார பீரங்கியாகக் களமிறங்கிய ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரில் யாருக்கு வின்னிங் ஸ்டிரைக் ரேட் அதிகம். பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் ஒரு வெற்றி கோப்பையைப் பரிசளித்திருக்கிறது. மறுபுறம் எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி இதுவரை இல்லாத அளவுக்கு மண்ணை கவ்வியிருக்கிறது. பீகார் சட்டமன்ற தேர்தலில் மகுடம் சூட, இரு கூட்டணிகளும் நட்சத்திர பிரச்சாரகர்களை களமிறக்கிய நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே, வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. இண்டி கூட்டணி தலைவர்களைக் கொண்டு ஆர்ஜேடி – காங்கிரஸ் நடத்திய பரப்புரைகளை, பீகார் மக்கள் வேடிக்கையாகக் கடந்து சென்றதையே தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பிரசாரங்களை தாண்டி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பரப்புரை, பெரிதும் கைக்கொடுத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்ட 31 தொகுதிகளில், 27 வேட்பாளர்கள் வெற்றி கனியைச் சுவைத்திருப்பதன் மூலம் இது நிரூபணமாகிறது. மற்ற தொகுதிகளிலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே என்டிஏ வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறும், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு போட்டியாளராகக் கருதப்படும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் வின்னிங் ஸ்டிரைக் ரேட் படுபாதளத்தில் உள்ளது.

மகாகத்பந்தன் கூட்டணியின் பிரச்சார பீரங்கியாக அறியப்பட்ட அகிலேஷ் யாதவ் , 22 இடங்களில் பரப்புரை மேற்கொண்டு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றியை வாங்கி தந்திருக்கிறார். ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதன் மூலம், மாயாவதியின் பிரசாரத்திற்கு கூடப் பீகாரில் கொஞ்சம் மவுசு இருப்பது உறுதியாகியிருக்கிறது. யோகி ஆதித்யநாத்தின் பிரச்சாரம் பீகார் மக்களின் மனதை தொட்டதற்கு, இண்டி கூட்டணி தலைவர்கள்மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள் ஓர் முக்கிய காரணம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் . குறிப்பாக, ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகிய மூவரையும் காதுகேளாத, கண் தெரியாத, வாய்பேசாத குரங்குகள் என யோகி ஆதித்யநாத் விமர்சித்தது வாக்காளர்களின் கவனத்தை பெற்றதாகக் குறிப்பிடுகிறார்கள்.

யோகி ஆதித்யநாத் இந்துத்துவா கொள்கையைக் கையில் எடுத்ததும், மக்களின் கவனத்தை பெற்றதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், தேஜஸ்வி யாதவ், யோகி ஆதித்யநாத்தின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி மட்டுமே கொடுத்து வந்ததாகவும், அடிப்படை பிரச்னைகளை பேசத் தவறிவிட்டதாகவும் விளக்கம் அளிக்கிறார்கள். 2027-ம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கும் கூட இதே போக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Tags: newsCm Yogi Adityanathtoday newsயோகி ஆதித்யநாத்Yogi Adityanath exploded as a propaganda cannon: Akhilesh Yadav turned into a water gun
Share
Tweet
SendShare
Previous Post

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

Next Post

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies