பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!
Jul 31, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Murugesan M by Murugesan M
Nov 16, 2025, 09:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைப் படுகுழியில் தள்ளியுள்ளது. இதுகுறித்து ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

குடும்ப அரசியல், ஊழல், காட்டாட்சி போன்றவற்றை பொதுமக்கள் விரும்புவதில்லை என்பதையே நடந்து முடிந்த பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தோல்விக்குக் குடும்ப அரசியலே முழுமுதற் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பீகார் மக்கள் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆட்சியில் அமரும் அதிகாரத்தை வழங்கியபோது, கால்நடை தீவன ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்குகளில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ், தனது முதலமைச்சர் பதவியை மனைவிக்கு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகளுக்கு எம்.பி., பதவி, மகன்களுக்குத் துணை முதலமைச்சர் பதவி, உறவினர்களுக்குப் பொறுப்புகள் என வாரி வழங்கிக் கட்சியினரை தவிக்கவிட்டதோடு, தனது குடும்பத்தின் மூலம் முழு மாநிலத்தையும் மொத்தமாகச் சுரண்டினார். லாலு பிரசாத் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கால்நடை தீவன ஊழல், அரசுக்கு வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்றது என அவர்மீதான அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள், பீகார் மக்கள் மனதில் பசுமரத்தாணி போன்று அப்படியே பதிந்து நின்றது…லாலு ஆட்சிக் காலத்தில், அரசு வேலைகளில் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகமாகப் பணிகளை ஒதுக்கியதும் மக்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பல்வேறு முறைகேடுகளில் சிக்கிய லாலுவும், அவரது குடும்பத்தினரும், நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து வரும் நிலையில், பீகாரை ஆள லாலு குடும்பம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்த அம்மாநில மக்கள், ராஷ்டிரிய ஜனதா தளத்தைப் புறக்கணித்ததால், தேர்தலில் குறைந்த இடங்களையே அக்கட்சி பெற்றிருக்கிறது. ஏற்கனவே லாலு குடும்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ராஷ்டிரிய கட்சி இன்னொரு குடும்ப கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்திருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்தனர்… அந்த அதிருப்தியே பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் வரலாற்றில் இல்லாத தோல்வியைப் பரிசாக அளிக்கக் காரணம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி நம்பிக்கையளிக்கக்கூடிய, நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்தித்த சூழலில், நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளைக் கூறி, மக்களை ஏமாற்றி எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று தேர்தல் களத்திற்கு வந்த மகாகத்பந்தன் கூட்டணிக்குப் பீகார் மக்கள் மரண அடியை கொடுத்திருக்கின்றனர். இதேபோன்று நிலை தமிழகத்திலும் நிலவுகிறது.

திமுக என்ற குடும்ப ஆட்சி, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தைப் பகிர்ந்து அளித்துள்ள நிலையில், வரும் தேர்தலில், பீகார் மக்கள் போன்று, தமிழக மக்களும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Biharbihar election 2025An end to family politics in Bihar elections: RJD falls into the abyss
ShareTweetSendShare
Previous Post

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

Next Post

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies