பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!
Sep 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Murugesan M by Murugesan M
Nov 16, 2025, 09:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைப் படுகுழியில் தள்ளியுள்ளது. இதுகுறித்து ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

குடும்ப அரசியல், ஊழல், காட்டாட்சி போன்றவற்றை பொதுமக்கள் விரும்புவதில்லை என்பதையே நடந்து முடிந்த பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தோல்விக்குக் குடும்ப அரசியலே முழுமுதற் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பீகார் மக்கள் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆட்சியில் அமரும் அதிகாரத்தை வழங்கியபோது, கால்நடை தீவன ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு வழக்குகளில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ், தனது முதலமைச்சர் பதவியை மனைவிக்கு வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகளுக்கு எம்.பி., பதவி, மகன்களுக்குத் துணை முதலமைச்சர் பதவி, உறவினர்களுக்குப் பொறுப்புகள் என வாரி வழங்கிக் கட்சியினரை தவிக்கவிட்டதோடு, தனது குடும்பத்தின் மூலம் முழு மாநிலத்தையும் மொத்தமாகச் சுரண்டினார். லாலு பிரசாத் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கால்நடை தீவன ஊழல், அரசுக்கு வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்றது என அவர்மீதான அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள், பீகார் மக்கள் மனதில் பசுமரத்தாணி போன்று அப்படியே பதிந்து நின்றது…லாலு ஆட்சிக் காலத்தில், அரசு வேலைகளில் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகமாகப் பணிகளை ஒதுக்கியதும் மக்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பல்வேறு முறைகேடுகளில் சிக்கிய லாலுவும், அவரது குடும்பத்தினரும், நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து வரும் நிலையில், பீகாரை ஆள லாலு குடும்பம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்த அம்மாநில மக்கள், ராஷ்டிரிய ஜனதா தளத்தைப் புறக்கணித்ததால், தேர்தலில் குறைந்த இடங்களையே அக்கட்சி பெற்றிருக்கிறது. ஏற்கனவே லாலு குடும்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ராஷ்டிரிய கட்சி இன்னொரு குடும்ப கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்திருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்தனர்… அந்த அதிருப்தியே பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் வரலாற்றில் இல்லாத தோல்வியைப் பரிசாக அளிக்கக் காரணம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி நம்பிக்கையளிக்கக்கூடிய, நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்தித்த சூழலில், நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளைக் கூறி, மக்களை ஏமாற்றி எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று தேர்தல் களத்திற்கு வந்த மகாகத்பந்தன் கூட்டணிக்குப் பீகார் மக்கள் மரண அடியை கொடுத்திருக்கின்றனர். இதேபோன்று நிலை தமிழகத்திலும் நிலவுகிறது.

திமுக என்ற குடும்ப ஆட்சி, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தைப் பகிர்ந்து அளித்துள்ள நிலையில், வரும் தேர்தலில், பீகார் மக்கள் போன்று, தமிழக மக்களும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Biharbihar election 2025An end to family politics in Bihar elections: RJD falls into the abyss
Share
Tweet
SendShare
Previous Post

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

Next Post

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies