சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு சென்னையில் செயல்படும் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்நிலையில், அந்த குறிப்பிட்ட கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.