தமிழகத்தில் மார்ச் 23-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக தலைமை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பறக்கும்படை மூலம் தமிழகம் முழுவதும் வாகனச் சோதனை நடைபெறுகிறது. தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து முயற்சிகளும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வரும் மக்களவை தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் சென்னை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்.
அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பிற்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.