கடற்கரையில் இருந்து கற்களை எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்!
Jan 14, 2026, 02:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கரையில் இருந்து கற்களை எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேனரி தீவு கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மணல், கற்கள், பாறைகள் என எதை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்.

சுற்றுலாவிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுப்பவர்கள் அதிகம் செல்லும் இடம் என்றால் அது கடற்கரையும், மலைப் பிரதேசமும் என்றே சொல்லலாம்.

அப்படிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் அங்குச் சென்று வந்ததற்கு அடையாளமாக அங்கிருந்து ஏதேனும் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம். அப்படி இல்லை என்றாலும் அங்கே இயற்கையாக இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருக்கும் மணல், சிறிய சிறிய கற்கள், சங்குகள் என தங்களுக்குக் கிடைப்பதை எடுத்துச் செல்வார்கள்.

அவற்றை தாங்கள் சேகரிக்க வீட்டிற்கு எடுத்துச் செல்வது அல்லது சிறிது நேரம் கிடைக்கும்போது அவற்றைப் பார்த்து ரசித்து நினைவுகளைத் திரும்பப் பெறுவதும் வழக்கம்.

இந்நிலையில் தற்போது ஒரு தீவு, கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மணல், கற்கள், பாறைகள் என எதை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் என்று அறிவித்துள்ளது.

ஆம், கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுராவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடற்கரையிலிருந்து மணல், கற்கள் மற்றும் பாறைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று கேனரி தீவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் லான்சரோட் கடற்கரைகளிலிருந்து ஒரு டன் மணல் பொருட்களை இழக்கிறது என்று அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேபோல் புகழ்பெற்ற “பாப்கார்ன் பீச்” ஒவ்வொரு மாதமும் இரண்டு டன் மணலை இழக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த அதிகாரிகள், இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கேனரி நிர்வாக கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கடற்கரை பகுதிகளிலிருந்து கற்கள் அல்லது மணலை எடுத்தால் 128 பவுண்டுகள் (சுமார் ரூ. 13,450) முதல் 2,563 பவுண்டுகள் (2,70,000 இந்திய ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பாப்கார்ன் அளவிலான கூழாங்கற்களை எடுத்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளால் எடுத்துச் செல்லப்படும் பொருட்களால், கடற்கரையோரங்களின் இயற்கை சமநிலையைச் சீர்குலைத்து ஆபத்தில் உள்ளதால், அதிகாரிகள் சவாலை எதிர்கொள்கின்றனர்.

Tags: Rs 2 lakh fine for taking stones from the beach!
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டி முடிவு!

Next Post

மருத்துவர் அய்யாவை பெருமைப்படுத்தியவர் பிரதமர் மோடி! – அன்புமணி ராமதாஸ் புகழாரம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies