கடற்கரையில் இருந்து கற்களை எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்!
Mar 15, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கரையில் இருந்து கற்களை எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேனரி தீவு கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மணல், கற்கள், பாறைகள் என எதை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்.

சுற்றுலாவிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுப்பவர்கள் அதிகம் செல்லும் இடம் என்றால் அது கடற்கரையும், மலைப் பிரதேசமும் என்றே சொல்லலாம்.

அப்படிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் அங்குச் சென்று வந்ததற்கு அடையாளமாக அங்கிருந்து ஏதேனும் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம். அப்படி இல்லை என்றாலும் அங்கே இயற்கையாக இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருக்கும் மணல், சிறிய சிறிய கற்கள், சங்குகள் என தங்களுக்குக் கிடைப்பதை எடுத்துச் செல்வார்கள்.

அவற்றை தாங்கள் சேகரிக்க வீட்டிற்கு எடுத்துச் செல்வது அல்லது சிறிது நேரம் கிடைக்கும்போது அவற்றைப் பார்த்து ரசித்து நினைவுகளைத் திரும்பப் பெறுவதும் வழக்கம்.

இந்நிலையில் தற்போது ஒரு தீவு, கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மணல், கற்கள், பாறைகள் என எதை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் என்று அறிவித்துள்ளது.

ஆம், கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுராவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடற்கரையிலிருந்து மணல், கற்கள் மற்றும் பாறைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று கேனரி தீவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் லான்சரோட் கடற்கரைகளிலிருந்து ஒரு டன் மணல் பொருட்களை இழக்கிறது என்று அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேபோல் புகழ்பெற்ற “பாப்கார்ன் பீச்” ஒவ்வொரு மாதமும் இரண்டு டன் மணலை இழக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த அதிகாரிகள், இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கேனரி நிர்வாக கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கடற்கரை பகுதிகளிலிருந்து கற்கள் அல்லது மணலை எடுத்தால் 128 பவுண்டுகள் (சுமார் ரூ. 13,450) முதல் 2,563 பவுண்டுகள் (2,70,000 இந்திய ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பாப்கார்ன் அளவிலான கூழாங்கற்களை எடுத்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளால் எடுத்துச் செல்லப்படும் பொருட்களால், கடற்கரையோரங்களின் இயற்கை சமநிலையைச் சீர்குலைத்து ஆபத்தில் உள்ளதால், அதிகாரிகள் சவாலை எதிர்கொள்கின்றனர்.

Tags: Rs 2 lakh fine for taking stones from the beach!
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டி முடிவு!

Next Post

மருத்துவர் அய்யாவை பெருமைப்படுத்தியவர் பிரதமர் மோடி! – அன்புமணி ராமதாஸ் புகழாரம்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies