கடற்கரையில் இருந்து கற்களை எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்!
Aug 13, 2025, 11:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கரையில் இருந்து கற்களை எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்!

Web Desk by Web Desk
Mar 22, 2024, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேனரி தீவு கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மணல், கற்கள், பாறைகள் என எதை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்.

சுற்றுலாவிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுப்பவர்கள் அதிகம் செல்லும் இடம் என்றால் அது கடற்கரையும், மலைப் பிரதேசமும் என்றே சொல்லலாம்.

அப்படிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் அங்குச் சென்று வந்ததற்கு அடையாளமாக அங்கிருந்து ஏதேனும் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வது வழக்கம். அப்படி இல்லை என்றாலும் அங்கே இயற்கையாக இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருக்கும் மணல், சிறிய சிறிய கற்கள், சங்குகள் என தங்களுக்குக் கிடைப்பதை எடுத்துச் செல்வார்கள்.

அவற்றை தாங்கள் சேகரிக்க வீட்டிற்கு எடுத்துச் செல்வது அல்லது சிறிது நேரம் கிடைக்கும்போது அவற்றைப் பார்த்து ரசித்து நினைவுகளைத் திரும்பப் பெறுவதும் வழக்கம்.

இந்நிலையில் தற்போது ஒரு தீவு, கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மணல், கற்கள், பாறைகள் என எதை எடுத்தாலும் அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் என்று அறிவித்துள்ளது.

ஆம், கேனரி தீவுகளில் உள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுராவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடற்கரையிலிருந்து மணல், கற்கள் மற்றும் பாறைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று கேனரி தீவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் லான்சரோட் கடற்கரைகளிலிருந்து ஒரு டன் மணல் பொருட்களை இழக்கிறது என்று அங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேபோல் புகழ்பெற்ற “பாப்கார்ன் பீச்” ஒவ்வொரு மாதமும் இரண்டு டன் மணலை இழக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த அதிகாரிகள், இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கேனரி நிர்வாக கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி கடற்கரை பகுதிகளிலிருந்து கற்கள் அல்லது மணலை எடுத்தால் 128 பவுண்டுகள் (சுமார் ரூ. 13,450) முதல் 2,563 பவுண்டுகள் (2,70,000 இந்திய ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பாப்கார்ன் அளவிலான கூழாங்கற்களை எடுத்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளால் எடுத்துச் செல்லப்படும் பொருட்களால், கடற்கரையோரங்களின் இயற்கை சமநிலையைச் சீர்குலைத்து ஆபத்தில் உள்ளதால், அதிகாரிகள் சவாலை எதிர்கொள்கின்றனர்.

Tags: Rs 2 lakh fine for taking stones from the beach!
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டி முடிவு!

Next Post

மருத்துவர் அய்யாவை பெருமைப்படுத்தியவர் பிரதமர் மோடி! – அன்புமணி ராமதாஸ் புகழாரம்

Related News

காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை

அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் – ட்ரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

புற்றுநோய்க்கு 7 நிமிடங்களில் சிகிச்சை – சுவிஸ் நிறுவன மருந்துக்கு விரைவில் ஒப்புதல்!

சீனாவில் வீட்டு வேலைகளை செய்யும் ரோபோ-க்கள்!

கிழக்கு உக்ரைனில் உள்ள யப்பூளுனிவ்கா நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

வழக்கை நடத்தக் கூடாது என அச்சுறுத்தல் – அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையீடு!

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை 10 நாட்களுக்குள் சரிவர செயல்படுத்தாவிட்டால் போராட்டம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் ஸ்ரீ ராகவேந்திரா கோயில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா!

மாமல்லபுரம் சிற்பங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது – கியூபா நாட்டு தூதர் புகழாரம்!

ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை குடியுரிமையாக ஏற்க முடியாது – தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies