அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தொடர எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகத் தொடர்வார் என்றும், சிறையில் இருந்தபடியே வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அதிஷி தெரிவித்துள்ளார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி சமூக ஆர்வலர் சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் எந்த அடிப்படையில் முதல்வராக நீடிக்கிறார் என்பது குறித்து மத்திய அரசு, டெல்லி அரசு, துணை நிலை ஆளுநர் உள்ளிட்டோர் விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.