சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை காவல்துறையிடம் ஒப்படைப்பு !
Sep 11, 2025, 01:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை காவல்துறையிடம் ஒப்படைப்பு !

Web Desk by Web Desk
Mar 23, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கடற்கொள்ளையர்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.  அந்த வகையில் 2023 டிசம்பர் மாதம் மால்டா நாட்டுக் கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்தக் கப்பலை தங்களுடைய கடத்தல் முயற்சிக்குப் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 15-ஆம் தேதி இந்தியக் கடற்கரையிலிருந்து, 2 ஆயிரத்து 800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் சென்று கொண்டிருப்பதை இந்தியக் கடற்படை கண்டுபிடித்தது.

இதனைத் தொடர்ந்து, கப்பலை மீட்க இந்தியக் கடற்படை அதிரடியாகக் களத்தில் இறங்கியது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் நடவடிக்கையில், கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17 விமானம், ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

பின்னர், சரக்கு கப்பலைச் சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, திடீரென இந்திய ஹெலிகாப்டர் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

சரணடையாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியக் கடற்படை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, கப்பல் சுற்றி வளைக்கப்பட்டதால், வேறு வழியின்றி கடற்கொள்ளையர்கள், இந்தியக் கடற்படையிடம் சரணடைந்தனர்.

பின்னர், கப்பலிலிருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள். கப்பல் ஊழியர்கள் 17 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் 100 நாட்களுக்கும் மேலாகக் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்தியக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 35 சோமாலியா கடற்கொள்ளையர்கள் மும்பை காவல்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

Tags: indian navyMumbai PoliceSomali PiratesProsecution
ShareTweetSendShare
Previous Post

கவிதாவின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!

Next Post

2024 ஐபிஎல் : டெல்லி கேபிட்டல்ஸ் பேட்டிங் !

Related News

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வாங்க – ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் உத்தரவு!

நேபாளத்தில் சிக்கி தவிப்பு – உதவி கோரி வீடியோ வெளியிட்ட தமிழர்கள்!

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

கனமழையை பயன்படுத்தி திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் திறப்பு – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!

சபரீசன் தந்தை வேதமூர்த்தி மறைவு – நாளை இறுதிச்சடங்கு!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – மியான்மரில் தயாரிக்கப்பட்டது அம்பலம்!

திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் – திமுக பேரூராட்சி தலைவர் கைது!

இன்றைய தங்கம் விலை!

எமர்ஜென்சி காலத்தின் தீவிர களச் செயற்பாட்டாளர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் – நயினார் நாகேந்திரன்

மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை!

14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் – விசாரணை நடத்த மணிஷ் திவாரி வலியுறுத்தல்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

பொறாமையின் காரணமாக செங்கோட்டையன் தடம் மாறி விட்டார் – ஆர்.பி.உதயகுமார்

விளக்கம் கேட்கவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது – செங்கோட்டையன்

கத்தார் தலைநகர் மீது தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies