சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை காவல்துறையிடம் ஒப்படைப்பு !
Jul 26, 2025, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை காவல்துறையிடம் ஒப்படைப்பு !

Web Desk by Web Desk
Mar 23, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கடற்கொள்ளையர்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.  அந்த வகையில் 2023 டிசம்பர் மாதம் மால்டா நாட்டுக் கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்தக் கப்பலை தங்களுடைய கடத்தல் முயற்சிக்குப் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 15-ஆம் தேதி இந்தியக் கடற்கரையிலிருந்து, 2 ஆயிரத்து 800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் சென்று கொண்டிருப்பதை இந்தியக் கடற்படை கண்டுபிடித்தது.

இதனைத் தொடர்ந்து, கப்பலை மீட்க இந்தியக் கடற்படை அதிரடியாகக் களத்தில் இறங்கியது. கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் நடவடிக்கையில், கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17 விமானம், ஹெலிகாப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன.

பின்னர், சரக்கு கப்பலைச் சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, திடீரென இந்திய ஹெலிகாப்டர் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

சரணடையாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியக் கடற்படை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, கப்பல் சுற்றி வளைக்கப்பட்டதால், வேறு வழியின்றி கடற்கொள்ளையர்கள், இந்தியக் கடற்படையிடம் சரணடைந்தனர்.

பின்னர், கப்பலிலிருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள். கப்பல் ஊழியர்கள் 17 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் 100 நாட்களுக்கும் மேலாகக் கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்தியக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 35 சோமாலியா கடற்கொள்ளையர்கள் மும்பை காவல்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

Tags: Somali PiratesProsecutionindian navyMumbai Police
ShareTweetSendShare
Previous Post

கவிதாவின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!

Next Post

2024 ஐபிஎல் : டெல்லி கேபிட்டல்ஸ் பேட்டிங் !

Related News

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

அன்புமணியின் நடைபயணம் தொடரும் : பாமக வழக்கறிஞர் பாலு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies