2024 ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.
இந்த தொடரின் இரண்டாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதல் போட்டி பஞ்சாப், மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 33 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 29 ரன்களும், மிட்சேல் மார்ஷ் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல் அக்சார் பட்டேல் 21 ரன்களும், ரிஷப் பண்ட் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க டெல்லி சாப்பிடல்ஸ் அணியின் ஸ்கோர் 147 ஆக இருந்தது.
இந்த சமயத்தில் இம்பாக்ட் பிளேயராக அபிஷேக் களமிறங்கினார். அவர் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என 10 பந்துகளில் 32 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை அதிகரித்தார்.
பின்னர் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் மற்றும் அர்ச்தீப் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அதேபோல் காகிசோ ரபாடா, ஹர்ப்ரீத் சிங், ராகுல் சாகர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.