இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் இந்த ஹோலி பண்டிகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹோலி பண்டிகையின் போது கலர் பொடிகளை தூவி விளையாடுவது வழக்கம்.
இந்த வருடம் ஹோலி பண்டிகையானது நாளை ( மார்ச் 25 ஆம் தேதி ) இந்தியாவில் கொண்டாடப்படவுள்ளது. ஹோலி பண்டிகை எதற்கு கொண்டாடப்படுகிறது மற்றும் அதன் வரலாறு என்ன என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக பனிக்காலம் முடிந்து வெயில் காலம் மாறுவது வசந்த காலம் என்று கூறப்படுகிறது.
இந்த வசந்த காலத்தில் பாக்டீரியா சார்ந்த காய்ச்சல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்கள் ஏற்படும். இதை எதிர்கொள்ளும் விதமாக ஹோலி பண்டிகை அன்று மக்கள் இயற்கையான வண்ணம் நிறைந்த பொடிகளை ஒருவர் மீது ஒருவர் எரிந்து விளையாடுகின்றர்.
ஹோலிக்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்ச்சி ஹோலிகா தகனம் என்று கூறப்படுகிறது. இது ஹோலி பண்டிகையின் முந்தன நாள் இரவு 8 மணிக்கு மேல் வீட்டு வாசலில் மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி அக்கினி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து மக்கள் பூஜை செய்யும் ஒரு விழா ஹோலிகா தகனம்.
இந்த விழாவில் பல வகையான இனிப்பு பண்டங்களும் அக்னி தேவனுக்கு தாம்பூலத்தில் படைக்கப்படுகிறது. ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள்.
தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.
இந்த வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது.